/* */

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: பெண் உள்பட 5 பேர் கைது

துபாய், ஐதராபாத், இலங்கையில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.2 கோடி தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: பெண் உள்பட 5 பேர் கைது
X

தங்கக்கடத்தல் - காட்சி படம் 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இலங்கையில் இருந்து சென்னை வந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 304 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

அதேபோல் உள்நாட்டு முனையத்தில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்த போது, எதுவும் இல்லாததால் தனியறையில் சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 703 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.44 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

கடந்த 2 நாட்களாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண் உள்பட 5 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 3 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 859 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 May 2023 8:13 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...