/* */

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை வண்ணாரபேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி:   முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
X

செய்தியாளர் சந்திப்பின் நடுவே அவ்வழியாக சென்ற இறுதி ஊர்வலத்திற்கு எழுந்து சென்று மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டை பொறுத்தவரை டீசல் விலை குறைப்பு தொடர்பாக அரசு வாய் திறக்கவில்லை. நிதியமைச்சர் போகாத ஊருக்கு வழி தேடுவது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அவசரப்பட்டு வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினோம் என நிதியமைச்சர் சொல்லிவிட்டு போகலாம். அதைவிடுத்து மக்களை முட்டாளாக்குகிறார்.

தமிழ்நாட்டில் சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. மக்கள் பிரச்சினைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. பாஜக கட்சியை வளர்க்க அவர்கள் பாடுபடுகின்றனர். ஆனால் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட பொங்கல் பரிசு தொகுப்புடன் நிதியை வழங்கியது அதிமுக அரசு. அதிமுக ரூ.2500 கொடுத்தது திமுக ரூ.3000 கொடுக்க வேண்டும் என செயல்பட்டால் தானே திமுக திறமையான அரசு. திமுக அரசுக்கு நிதி மேலாண்மை குறித்து தெரியவில்லை.

ஆன்லைன் மூலம் தேர்வு என்பது மாணவர்களின் நியாயமான கோரிக்கை. மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடுகிறது. இந்த செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்ற மாணவர்களுடைய கோரிக்கை நியாயமானது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஒரு முறை ஆன்லைன் தேர்வு என்பதை அரசு ஏற்க வேண்டும்.

ரோம் நகர் தீ பற்றி எறியும் போது மன்னன் பிடெல் வாசித்தார் என்பது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்துகிறார் முதலமைச்சர். முன்னாள் முதல்வர் கலைஞரை போல மக்கள் பாதிப்பில் இருக்கும் பொழுது பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மு க ஸ்டாலின் பாராட்டு விழாவில் சிக்ஸர் அடித்ததாக கூறுகிறார். ஆனால் யார் சிக்ஸர் அடித்தது என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.

பெருவெள்ளத்தில் விவசாயிகள் மீனவர்கள் நெசவுத் தொழிலாளர்கள் வியாபாரிகள் என அனைவரும் போல்ட் ஆகி விட்டனர். வார்டு வரையறையை திமுக தனக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தி கொண்டது. திமுக வலுவிழந்து காணப்படும் தெருக்களை மற்றொரு வார்டு உடன் இணைத்து தங்களுக்கு சாதகமான பகுதியில் இணைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் நடுவே அவ்வழியாக சென்ற இறுதி ஊர்வலத்திற்கு எழுந்து சென்று மரியாதை செய்துவிட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

Updated On: 22 Nov 2021 2:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?