/* */

தென்சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை

தென் சென்னையில் ரவுடியாக வலம் வந்த நாகூர்மீரான், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தென்சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை
X

சென்னை ஆலந்துாரைச் சேர்ந்தவர் நாகூர்மீரான், 28. தென் சென்னையில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது, ஆதம்பாக்கம், கே.கே.நகர், குன்றத்துார், கொரட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பள்ளிக்கரணை அடுத்த வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்த நாகூர் மீரான், நேற்று மாலை தன் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகருக்கு சென்றார். மூன்றாவது தெருவில் அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகூர்மீரான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆதம்பாக்கம் போலீசார் அவரின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 15 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?