/* */

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விலங்குகள் மீட்பு

பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வந்த நபர், சென்னை விமானநிலைய சுங்கத்துறையினரின் சோதனையில் பிடிபட்டார்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விலங்குகள் மீட்பு
X



பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 15 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து வந்த விமானப் பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் வெள்ளை முள்ளம்பன்றி, டாமரின் வகை குரங்கு ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல கடந்த 16 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாஹிப் தம்பியை சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 9 வெள்ளை எலிகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், பாங்காக் விமான நிலையத்தின் வெளியில் அடையாளம் தெரியாத நபர் இந்த பார்சலை கொடுத்து, இதை சென்னை விமான நிலையத்தின் வெளியில் ஒருவர் பெற்றுக் கொள்ள இருந்ததாகவும் தெரிவித்தனர். இருவரிடமிருந்தும் விலங்குகளை பறிமுதல் செய்த சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பினர்.



Updated On: 18 May 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!