/* */

1.30 லட்சம் காவலர் குடும்பங்களுக்கு மனநலப்பயிற்சி: டி.ஜி.பி. தொடக்கம்

பல்வேறு காரணங்களால் காவலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருவதைக் தடுப்பதே நோக்கம்

HIGHLIGHTS

1.30 லட்சம் காவலர் குடும்பங்களுக்கு மனநலப்பயிற்சி:  டி.ஜி.பி.  தொடக்கம்
X

காவல்துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பேருக்கு மனநலப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை டி.ஜி.பி., சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலாக பணிபுரிகிறார். கடந்த செப் 4ல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்தவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இவர், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ரூ. 7 லட்சம் ரூபாயை இழந்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதேபோல, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பிளேடால் கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் இளம் வயதுடைய போலீசார் தங்களது குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, அதிகாரிகளின், 'டார்ச்சர்' உள்ளிட்ட காரணங்களால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண டி.ஜி.பி., சைலேந்திரபாபு தீர்வு காண முடிவு செய்தார்.

முதல் கட்டமாக 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பேருக்கு, நிறைவு வாழ்வுக்கான மனநலப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்படும், தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 112 போலீசார் மற்றும் 134 மனநல ஆலோசகர்களுக்கு, மூன்று மாதங்கள் 'ஆன்லைன்' வாயிலாக, பட்டய பயிற்சி அளிக்க உள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் மூலமாக 1.30 லட்சம் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் யாதவ் கண்காணிப்பில் மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மனநல பட்டயப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, ஆன்லைன் மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

Updated On: 21 Sep 2021 5:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  2. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  4. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  5. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  7. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  8. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!