/* */

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சொப்னா என்கின்ற ஸ்டெல்லா, 37. இவர் பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள ஆன்லைன் கம்ப்யூட்டர் சென்டரில் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார்.

இவர் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிக்கும் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான கலைச்செல்வி மற்றும் மூன்று பேரிடம் கடந்த 2019 ஆம் வருடம் மாத சீட்டு போட்டு உள்ளார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு பத்தாம் மாதம் சீட்டுகள் முடிவடைந்த நிலையில் சீட்டு நடத்தியவர்கள் சொப்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டி இருந்துள்ளது.

இதுகுறித்து பலமுறை கேட்டும் பணம் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் சொப்னா குற்றவியல் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையீட்டார். மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் சீட்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கொடுங்கையூர் போலீசாருக்கு அறிவுறுத்தியது அதனடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட கலைச்செல்வி. கவிதா சிவசங்கர் மணி. கலா உள்ளிட்ட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?