/* */

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது

சென்னை பெரம்பூரில், பிளாட்பாரத்தில் தங்கியிருந்த முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சென்னை: முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது
X

கைதான ஹேமந்த்

சென்னை மாதவரம் நெடுஞ்சாலை, கண்ணபிரான் தெரு சந்திப்பில் உள்ள, மாநகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. அதன் அருகில் இருக்கும் பிளாட்பாரத்தில், முதியவர் ஒருவர், தலையில் பலத்த காயமுடன் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த முதியவர், ஓராண்டு காலமாக மாநகராட்சி கட்டண கழிப்பிடம் அருகே வசித்து வந்த மூர்த்தி, வயது 65 என்பதும், ஆதரவுவற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை, விசாரித்தபோது, அவர் ஆந்திர மாநில திருப்பதியை சேர்ந்த ஹேமந்த், வயது 29 என்பதும், சில மாதமாக முதியவருடன் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. முதியவரின் தலையில் கல்லை போட்டு கொன்றதும் அவர் தான் என்று தெரியவந்தது. ஹேமந்த், போரூரில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து தப்பி வந்துள்ளார். ஹேமந்த்தை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

Updated On: 18 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு