/* */

வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளை; மர்ம ஆசாமிகளுக்கு வலை

சென்னை வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளை; மர்ம ஆசாமிகளுக்கு  வலை
X

சென்னை வியாசர்பாடி மெகிசின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர், சென்னை மாவட்ட கலெக்டரிடம், தபேதராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 30ஆம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலை, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்; உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் தங்க நகைகள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றன. கைரேகை நிபுணர்களை வரவழைத்து, திருடர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்து, பழைய திருடர்களின் கைரேகை ஒத்துப் போகிறதா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...