/* */

சென்னை வியாசர்பாடியில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது

சென்னை வியாசர்பாடியில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சென்னை வியாசர்பாடியில் மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது
X

கைது செய்யப்பட்ட பிரபாகரன்.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 50 ). இவர் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி( 45 ).இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது.இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபாகரன் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49வது பிளாக் பகுதியில் இந்திராணி நடத்திவரும் சிறிய அளவிலான தையல் கடைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு அவருடன் சண்டைமிட்டு உள்ளார்

மேலும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரபாகரன் அங்கியிருந்த கத்தரிக்கோலை எடுத்து இந்திரானின் காதில் ஓங்கி குத்தினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார் இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் இந்திராணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்ததால் பயந்துபோன பிரபாகரன் உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். வியாசர்பாடி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திராணியிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Jan 2022 1:13 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...