/* */

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது
X

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கார்த்தி.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், வயது 30 இவர், பேசின்பிரிட்ஜ் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது அறையில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, இரவு 12 மணியளவில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்

நண்பர்கள் எவ்வளவோ கூறியும் கேட்காமல், தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், கை இரண்டு தோள்பட்டை முழுவதும் காயம் ஏற்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து கார்த்திக்கின் நண்பர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 20 சதவீத தீக்காயங்களுடன் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?