/* */

முழு ஊரடங்கு எதிரொலி: வடசென்னையில் வெறிச்சோடிய சாலைகள்

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வடசென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு எதிரொலி: வடசென்னையில் வெறிச்சோடிய சாலைகள்
X
வடசென்னையில் வெறிச்சோடிய சாலைகள்.

தமிழகத்தில் ஒவ்வொருநாளும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் இரவு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

நேற்று இரவு 10 மணியிலிருந்து திங்கள் காலை 5 மணிவரை இடைவிடாது 31 மணிநேரம் ஊராடங்கால், சென்னையின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

குறிப்பாக குறுகிய இடவசதி கொண்ட வடசென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம் ,மூலக்கடை சந்திப்பு, வியாசர்பாடி ஜீவா மேம்பாலம், கணேசபுரம் மேம்பாலம், புளியந்தோப்பு பகுதி, கொளத்தூர் 200 அடி சாலை. பேப்பர் மில்ஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து இரு சக்கர வாகனத்தின் செல்பவர்களிடம் அதற்கான காரணங்களை கேட்டு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இன்று காணும் பொங்கல் என்பதால் எப்போதும் பொதுமக்கள் வெளியே சென்று வருவது வழக்கம். ஆனால் இந்த முறை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Updated On: 16 Jan 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி