/* */

வியாசர்பாடி பகுதிகளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளை

வியாசர்பாடி பகுதிகளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடி பகுதிகளில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளை
X

வியாசர்பாடியில் கொள்ளையடிக்கப்பட்ட ஜூஸ் கடை. 

சென்னை பெரம்பூர் பிபி ரோடு பகுதியில் இன்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்ட போது இரண்டு கடைகளின பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இதுகுறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமார் 46 என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு லேப்டாப்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோன்று அதே முகவரியில் இயங்கி வரும் பாண்டியராஜன், 37 என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையின் பூட்டை உடைத்து அதில் இருந்த 2000 ரூபாய் பணம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அதேபோல், வியாசர்பாடி மெல்பட்டி பொண்ணப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது 36 இவர் வியாசர்பாடி ஸ்டீபன்சன் லைன் 4வது தெரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் கடையை திறப்பதற்காக சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 9:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்