/* */

கொடுங்கையூரில் 24 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

குட்கா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அதனை வட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் 24 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா.

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் இரண்டாவது பிளாக் பகுதியில் ஒரு வீட்டில் நேற்று மாலை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்து 24 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்த ஷேக் அப்துல்லா (57) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் குட்கா பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அதனை வட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஷேக் அப்துல்லா மீது வழக்குபதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு