/* */

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்

சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்
X

சென்னையில் 11 ஆண்டுகளுக்கு பின் கைதான ரவுடி பிரபு.

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வழிப்பறி சம்பவம் ஒன்று நடந்தது. இதில் கொடுங்கையூர் மெட்ரோ வாட்டர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபு என்கின்ற வெள்ள பிரபு(36) ஈடுபட்டிருந்தார். இவர் மீது வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் பிரபு கொடுங்கையூர் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாறி சென்று விட்டார். இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அதுமட்டுமின்றி வியாசர்பாடி பகுதியில் பிரபு மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் பிரபு மீண்டும் கொடுங்கையூர் பகுதிக்கு வருவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று கொடுங்கையூரில் உள்ள வீட்டில் இருக்கும்போது பிரவுவை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Updated On: 5 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...