/* */

வியாசர்பாடியில் செல்போன் கொள்ளையர்கள் கைது

வியாசர்பாடியில் செல்போன் கொள்ளையர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட வசந்த், சங்கர்.

சென்னை வியாசர்பாடி ஐந்தாவது பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 56. இவர் கடந்த 25ஆம் தேதி மாலை தனது காரில் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி டீசல் போடுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார். டீசல் போட்டுவிட்டு மீண்டும் வாகனத்தில் அமர்ந்து வண்டியை எடுத்தபோது வண்டியில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது ராஜேந்திரன் டீசல் போடும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்த் 22 மற்றும் கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்கின்ற சைக்கோ சஙகர் 22 ஆகிய 2 பேரையும் எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து இவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...