/* */

திருவிழாவைப் போல் மக்கள் தடுப்பூசி போட்டது மகிழ்ச்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவிழாவைப் போல் மக்கள் தடுப்பூசி போட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவிழாவைப் போல் மக்கள் தடுப்பூசி போட்டது மகிழ்ச்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
X

அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் முகாமை ஆய்வு செய்து மதுரையில் இருந்து சென்னை வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை திமுக எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா தலைமையில் திமுக வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரே நாளில் 40 ஆயிரம் இடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தி மிகப்பெரிய அளவிலான சாதனையாக 28 லட்சத்தி 36 ஆயிரத்தி 776 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இதே அளவிலான தடுப்பூசி முகாம் நடத்தி உத்திர பிரதேசத்தில் போடப்பட்டிருக்கிறது. ஆனால் நமது மக்கள் தொகையை காட்டிலும் 3 மடங்கு கூடுதலாக கொண்ட மாநிலம்.

தமிழகத்தில்நடைபெற்று இருக்கின்ற இந்த சாதனையானது மகத்தான சாதனையாகும். தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு போடுகின்ற அளவுக்கு நிர்வாக கட்டமைப்பு உள்ளது என சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறினார்.

ஆனால் இன்றைக்கு 3 மடங்காக மாறி ஒரு நாளைக்கு 29 லட்சம் வரை தடுப்பூசி போடும் முறை நிர்வாக கட்டமைப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 3லட்சத்தி 13 ஆயிரத்தி 112 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். ஆனால் தற்போது 66 சதவீதத்திற்கு மேலாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு அறிவிக்க உள்ளோம்.

மேலும் வாரம் ஒருமுறை இதுபோன்ற மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்துவதற்கு கூடுதல் தடுப்பூசிகளை தர வேண்டுமென மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலமாக கேட்க உள்ளோம். இது நிச்சயம் தமிழக மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்வேறு இடங்களில் பிற்பகலுக்கு பிறகு தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தெரிவித்தனர். குறிப்பிட்ட முகாமங்களில் அளவிற்கு அதிகமாக மக்கள் வருகையால் இது ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாமல் சென்றவர்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்து கொண்டு அடுத்த நாள் அழைத்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

திருவிழாவைப் போல் மக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை மெகா முகாம் நடத்துவதற்கு ஏதுவாக தடுப்பூசிகளை கேட்டு உள்ளோம். 2வது தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே கோவக்சீன் போடப்பட்டது.

கூட்டத்தொடரின் கடைசி நாளில் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார். நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைக்கு ஏற்றார்போல் சட்டவல்லுனர்கள் கொண்டு நீட் விலக்கு பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். கடந்த கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய தீர்மானம் போல் இருக்காது. நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் உயிரை இழக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

Updated On: 13 Sep 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...