/* */

மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா: ஜெயக்குமார் பேட்டி

மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா: ஜெயக்குமார் பேட்டி
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பைல் படம்

தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா. நீங்கள் எங்க வேண்டாலும் போலாம், யாரும் வர மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொன்விழா ஆண்டு வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி 2 மணிநேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல இருப்பது குறித்தும் அதிமுக-வின் புதிய அவை தலைவர் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அப்போது பேசிய அவர்;

அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தது. இது எந்த ஒரு காட்சிக்கும் கிடையாது. 5 முதல் அமைச்சர்கள் இதுவரை அதிமுக ஆட்சியில் ஆண்டுள்ளனர். பல சோதனைகள் இன்னல்களை தாண்டி வீர நடை வெற்றி நடை போட்டு வருகிறது அதிமுக இயக்கம்.பொன் விழா எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொன் விழா ஆண்டு என்பதால் மிக பெரிய அளவில் கொண்டாடப்படும்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து குறித்து;

வியூகங்கள் சார்ந்த தலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார், எந்த குழப்பமும் இல்லை, இதைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. உரிய நேரத்தில் அவை தலைவர் குறித்து அறிவிக்கப்படும். நான் ஒரு சாதாரண தொண்டன். இதுவே என் பெருமை. அது போதுமானது. பதவி இரண்டாவது தான்.

சசிகலா குறித்த கேள்விக்கு;

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கயும் போகமாட்டார்கள். சாகும் வரை அதிமுக தான். சிறையில் இருந்து வந்தவர்கள் ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை, தற்போது அரசியல் செய்ய வேண்டும், என்று நினைத்தவர், மக்கள், தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் நினைவிடம் செல்கிறார்கள். நீங்கள் எங்க வேண்டாலும் போலாம் யாரும் வர மாட்டார்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Updated On: 11 Oct 2021 1:47 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!