/* */

செங்குன்றத்தில் மகளிர் தின வாக்கத்தான் பேரணி

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு செங்குன்றத்தில் வாக்கத்தான் பேரணி நடந்தது

HIGHLIGHTS

செங்குன்றத்தில் மகளிர் தின வாக்கத்தான் பேரணி
X

செங்குன்றத்தில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ரேலா மருத்துவமனை சார்பில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்த பேரணியை செங்குன்றம் சட்டம் ஒழுங்கு காவல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் ரேலா மருத்துவமனை சேர்மன் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் மஸ்தான் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணியில் மருத்துவமனை ஊழியர்கள், பாடியநல்லூர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆல்பா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள், உமையாள் செவிலியர் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாடிய நல்லூரிலிருந்து செங்குன்றம் காவல் நிலையம் வரை பெண்ணுரிமை காப்போம் ஆரோக்கியமான எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் ஆரோக்கியமான வாழ்க்கையே அழகான எதிர்காலம் என்பது போன்ற பெண்களின் ஆரோக்கியம் காக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Updated On: 9 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்