/* */

பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு செங்குன்றம் டாக்டர் அம்பேத்கர் குழு நண்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வழக்கறிஞர் மதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி வட்டாச்சியர் செல்வகுமார், செங்குன்றம் சரக சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் துப்புரவு பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி சமபந்தி விருந்தினை தொடங்கி வைத்தனர்.

இதில் கவுன்சிலர்கள் 4-வது வார்டு கார்த்திக்கோட்டீஸ்வரன், 10-வது வார்டு கோமதிபாஸ்கர், பேரூர் கழக துணை செயலாளர் கபிலன், 8-வது வார்டு கவுன்சிலர் வினோதினிபாலாஜி, 10- வது வார்டு செயலாளர் மதிவாணன், பேரூர் கழக மாணவரணி அமைப்பாளர் மோகன்குமார், பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சாம்கார்த்திக், 6-வது வார்டு துணை செயலாளர் கருப்பசாமி, சமூக சேவகர் நாகூர்அனீபா மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



Updated On: 4 May 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  2. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  4. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  7. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  8. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  9. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  10. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!