/* */

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் கோரிக்கையை ஏற்று உடனடியாக செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி
X

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் சாலை அமைக்கப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி 7-வது வார்டு வ.ஊ.சி தெருவில் வசிக்கும் மக்கள் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். 7-வது வார்டு உறுப்பினர் கீதாவிஜி மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் சீரிய முயற்சியில் மக்கள் நலன் கருதி புழல் ஒன்றிய குழு சேர்மன் தங்கமணிதிருமால், துணை சேர்மன் சாந்திபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பூமி பூஜைகள் செய்து பின்னர் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு சிதிலம் அடைந்த சாலையை ரூ.10.70 லட்சம் மதிப்புள்ள புதிய தார் சாலையாக அமைத்து தரப்பட்டது. இதனைத்தொடர்ந்து 7-வது வார்டு வ.ஊ.சி.தெரு பகுதிவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய தார் சாலை அமைத்து தந்த ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன், மற்றும் வார்டு உறுப்பினர் கீதாவிஜி ஆகியோரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெறிவித்தனர்.

Updated On: 10 July 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்