/* */

செங்குன்றத்தில் குடிநீர் பாட்டிலில் கிடந்த கரப்பான் பூச்சி

செங்குன்றத்தில் குடிநீர் பாட்டிலில் கரப்பான் பூச்சி கிடந்ததால், வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.

HIGHLIGHTS

செங்குன்றத்தில் குடிநீர் பாட்டிலில் கிடந்த கரப்பான் பூச்சி
X

குடிநீர் பாட்டிலில் கிடந்த கரப்பான் பூச்சி.

செங்குன்றத்தில் பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்க முயன்றபோது பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர். அதிர்ச்சியடைந்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் கரிக்கோல்ராஜ் என்பவர் அங்கிருந்த கடை ஒன்றில் தாகத்திற்கு 20 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்க முயன்றுள்ளார். தனியார் நிறுவனத்தின் பெயர் கொண்ட அடைக்கப்பட்ட பாட்டில் குடிநீரில் கரப்பான் பூச்சி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மக்களை உயிரை பாதுகாக்கும் வகையில் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பூச்சி இறந்த நிலையில் குடிநீர் பாட்டிலில் இருக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முறையான தரத்தில் தண்ணீர் பாட்டில் தயார் செய்யாத போலி நிறுவனங்களை, அதிகாரிகள் கண்டறிந்து ஆய்வு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 9 Jun 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!