Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
செங்குன்றத்தில் காரில் செம்மரக்கட்டை கடத்திய 9 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வழியாக சொகுசு காரில் 250 கிலோ செம்மரம் கடத்திய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வழியாக செம்மரக்கடத்தல்நடைபெறுவதாக செங்குன்றம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து செங்குன்றம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் சொகுசு காரில் சுமார் 250கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் ஓட்டுநர், மற்றும் செம்மர கடத்தலுக்கு திட்டம் தீட்டியோர், பொருளை வாங்க காத்திருந்தோர் என 9பேரை கைது செய்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.