/* */

எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சாலை மறியல் போராட்டம்

எஸ்டிபிஐ  கட்சி மத்திய சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
X

மத்திய அரசைக்கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்.

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் (27.09.21) நடத்திய பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை மாவட்டம் (வடக்கு) சார்பாக ,மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) பொதுச் செயலாளர் எஸ்வி. ராஜாள் தலைமையில், துறைமுகம் தொகுதி, பாரிமுனை, குறளகம் அருகில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) நிர்வாகிகள் மற்றும் துறைமுகம், வில்லிவாக்கம் மற்றும் எழும்பூர் தொகுதி,வட்டம்,கிளை நிர்வாகிகள் மற்றும் SDTU மத்திய சென்னை மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


Updated On: 27 Sep 2021 6:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!