/* */

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்
X

கோப்பு படம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதன்படி, தெற்கு ரயில்வேயின் பிரதான ரயில் நிலையங்களில், துாய்மை பாதுகாப்பு குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை, சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் நிலையத்தில், தெற்கு ரயில்வே தலைமையக பொது மேலாளர் ஜான் தாமஸ் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர்கள் ஆனந்த், சச்சின் புனிதா, சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தில், நிலையங்களையும் ரயில்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள பயணியரின் ஒத்துழைப்பு அவசியமானது. ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கண்காட்சியும் நடத்தப்பட்டது. வரும், 30ம் தேதி வரை என, 15 நாட்கள் நடத்தப்படும் துாய்மை பிரசாரத்தில், ரயில்வே சாரணர் இயக்கத்தினர், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

Updated On: 17 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்