/* */

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னை: ரயில் நிலையங்களில் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம்
X

கோப்பு படம்

தெற்கு ரயில்வே சார்பில், ரயில் நிலையங்களில் 15 நாட்கள் துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதன்படி, தெற்கு ரயில்வேயின் பிரதான ரயில் நிலையங்களில், துாய்மை பாதுகாப்பு குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை, சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் நிலையத்தில், தெற்கு ரயில்வே தலைமையக பொது மேலாளர் ஜான் தாமஸ் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர்கள் ஆனந்த், சச்சின் புனிதா, சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தில், நிலையங்களையும் ரயில்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள பயணியரின் ஒத்துழைப்பு அவசியமானது. ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கண்காட்சியும் நடத்தப்பட்டது. வரும், 30ம் தேதி வரை என, 15 நாட்கள் நடத்தப்படும் துாய்மை பிரசாரத்தில், ரயில்வே சாரணர் இயக்கத்தினர், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

Updated On: 17 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...