/* */

வடசென்னையில் போலி வணிக கணக்குகள் முடக்கம்: வணிக வரி ஆணையர் நடவடிக்கை

வடசென்னையில் நடைபெற்ற இரும்பு வணிகத்தில் ரூபாய் 2.19 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிவரவை துய்த்தது தெரிய வந்தது.

HIGHLIGHTS

வடசென்னையில் போலி வணிக கணக்குகள் முடக்கம்: வணிக வரி ஆணையர் நடவடிக்கை
X

வணிக வரித்துறை அலுவலகம் ( கோப்பு படம் ) 

சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் இணை ஆணையர், சென்னை நுண்ணறிவுப் பிரிவு -1 ன் மேற்பார்வையில்ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சில போலி வணிகர்கள் மூலம் வடசென்னையில் வணிகம் செய்து வரும் இரும்பு வணிகம் செய்தவர்கள் ரூபாய் 2.19 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரிவரவை துய்த்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களது 9 வங்கிக் கணக்குகள் வணிகவரித் துறையால் கண்டறியப்பட்டு அக்கணக்குகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையரால், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் பிரிவு-83ன் கீழ் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டது.

மேலும், வணிகர்கள் விசாரணை தொடர்ந்து யாராயினும் போலி வணிகர்களிடமிருந்து உள்ளீட்டு வரிவரவு பெற்றது தெரியவந்தால் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என வணிக வரித்துறை எச்சரித்துள்ளது.

Updated On: 21 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  2. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  3. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  5. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  6. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  7. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  9. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  10. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...