/* */

தமிழக முதல்வரை பாராட்டி 42 நிமிடங்கள் உரையாற்றிய தமிழக ஆளுநர்

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து 42 நிமிடம் உரையாற்றினார்

HIGHLIGHTS

தமிழக முதல்வரை பாராட்டி 42 நிமிடங்கள் உரையாற்றிய  தமிழக ஆளுநர்
X

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் சட்டசபைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் மலர் கொடுத்து வரவேற்றனர்.

இதை தொடர்ந்து நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, "கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். ஒமிக்ரான் தொற்றை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்து வருகிறது. சமீபத்திய ஆய்வு முடிவின்படி இந்தியாவின் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை உள்ளிட்ட நகரங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இருப்பினும் நீர்த்தேக்கங்களில் இருந்து முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இஸ்லாமியர்கள் , கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் தொடரும். பெரியார் ,அண்ணா , காமராஜர், கலைஞர் கருணாநிதி வழிவில் சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் காக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழகத்தை உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மேம்படுத்தப்படும் , அரசு பள்ளிகளை நவீனமாக மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் மாபெரும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்படும். பொருளாதார மேம்பாட்டிற்காக சாலைகளை மேம்படுத்தி வருகிறது.அத்துடன் இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் . நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துக்குள்ளான 4,482 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது.

இதுதவிர, இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது,தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது.முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும். கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும், சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும், 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது, நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

இறுதியாக வாழிய செந்தமிழ், வளர்க நற்றமிழர் ,வாழிய பாரத மணித்திரு நாடு என்ற பாரதியின் வரிகளுடன் ஆளுநரின் உரை நிறைவு பெற்றது. நன்றி, வாழ்க தமிழ் என்று சட்டசபையில் தனது 42 நிமிட உரையை ஆளுநர் ஆர் என் ரவி நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 5 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...