/* */

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி

கட்டிட அனுமதி தொடர்பாக அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறுவதற்கு, 'வாட்ஸ் ஆப்' எண்களை சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் இனி வாட்ஸ்ஆப் மூலம் கட்டிட அனுமதி
X

பைல் படம்.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (சி.எம்.டி.ஏ.,) திட்ட அனுமதி தொடர்பாக, பொதுமக்கள் வருவதை பயன்படுத்தி, சிலர் லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அங்கு தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரிகளை சந்திக்க பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி சந்திக்க வேண்டுமானால், அது குறித்து 'இ - மெயில்' அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவித்து நேரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது கூடுதல் வசதியாக 91500 64456, 91500 64457 ஆகிய மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களில் வாட்ஸ் ஆப் வாயிலாக தொடர்பு கொண்டு அதிகாரிகளை சந்திக்க நேரம் பெறலாம் என சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 17 Sep 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்