/* */

காசிமேட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

சென்னை காசிமேடு ஜிஎம் பேட்டை பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

காசிமேட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
X

பைல் படம்

சென்னை காசிமேடு பகுதியில் ரவுடியான அட்டு ரமேஷ் என்பவரை சில தினங்களுக்கு முன்பு கல்பாக்கம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் அவருடைய உடல் நேற்று காசிமேடு பகுதியில் அடக்கம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க வடக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது தனிப்படை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் காசிமேடு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்கள் நல்லதம்பி மற்றும் முகமது காட்டுபாவா ஆகியோர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

காசிமேடு ஜிஎம் பேட்டை பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்து காசிமேடு என்2 காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து வினோத்குமார், சாம்சங், சுரேந்தர் ஆகிய மூன்று பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்

Updated On: 13 Sep 2021 8:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?