/* */

சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்கள் அவதி

செம்மெஞ்சேரி, ஜாவஹர் நகர், எழில்முக நகர் பகுதிகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன

HIGHLIGHTS

சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்கள் அவதி
X

சென்னை அடுத்த செம்மெஞ்சேரி பகுதியில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது

கனமழையின் காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னை அடுத்த செம்மெஞ்சேரி, ஜாவஹர் நகர், எழில்முக நகர் பகுதிகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் வசிக்ககூடிய பகுதிகளில் சுமார் 2 அடிக்கு மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் தேங்கி மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டாலும் இப்பகுதியில் மட்டும் தொடர்ந்து மழைநீர் தேங்கி வருகிறது.

தேங்கி மழைநீரில் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் நோய்தொற்று பரவும் அபாயத்தை உணராமல் குளித்து விளையாடி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் இச்சாலையினை கடக்க பெரும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர். தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தி, வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 26 Nov 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?