/* */

சென்னை மாநகராட்சி திமுக வசமானது - 15 இடங்களில் அதிமுக வெற்றி

சென்னை மாநகராட்சி தேர்தலில் 153 இடங்களை கைப்பற்றி, திமுக மீண்டும் வசப்படுத்தியது.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சி திமுக வசமானது - 15 இடங்களில் அதிமுக வெற்றி
X

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவி தேர்தலில், ல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.

இந்நிலையில், திமுக கூட்டணி, 153 இடங்களை பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்திலும், மற்றவை 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ளது. மாநகராட்சி உறுப்பினர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 4-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

Updated On: 23 Feb 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  2. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  3. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  4. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  5. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
  8. டாக்டர் சார்
    கரு உள்வைப்பு என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்!
  9. கல்வி
    எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!
  10. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு