/* */

சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்துறை போட்டிகள்

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்துறை போட்டிகள்
X

கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட, 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகளை, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை நடத்தி வருகிறது.

அதன்படி, குரலிசை , கருவியிசை , பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று (15.05.2022) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற குரலிசைப்போட்டியில் முதல் பரிசு ஸ்ரீ ஸ்வராத்மிகா, இரண்டாம் பரிசு வி. முகுந்த சாய், மூன்றாம் பரிசு நா. ரித்திக்கேஷ்வர், கருவியிசை போட்டியில் முதல் பரிசு பி. வெண்ணிலா(வயலின்),

இரண்டாம் பரிசு கா. கார்த்திக் பாலாஜி(மிருதங்கம் )

மூன்றாம் பரிசு கி. லவ் அய்யங்கார் (புல்லாங்குழல்),

பரதநாட்டியம் போட்டியில் முதல் பரிசு எஸ். சஹானா,

இரண்டாம் பரிசு ப. கிருஷ்ணப்பரியா, மூன்றாம் பரிசு பி. ஸ்ருதி, கிராமிய கலை போட்டியில் முதலாம் பரிசு நா. ராஜன் (கரகம் தப்பாட்டம் )

இரண்டாம் பரிசு சு.வி. ரமணன்(கரகம் ) மூன்றாம் பரிசு அ. தமிழ் செல்வன் (பறை) ஆகியோர் பெற்றனர்.

கவின் கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலாம் பரிசு கு. பவித்ரா, இரண்டாம் பரிசு சி. கார்திக்ராஜா, மூன்றாம் பரிசு ப. ஷாரணி ஆகியோர் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000, இரண்டாம் பரிசு ரூ. 4500, மூன்றாம் பரிசு ரூ. 3500 வழங்கப்படுகிறது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஐந்து இளைஞர்கள் மாநில கலைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 16 May 2022 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி