/* */

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர் அதிரடி

காய்கறி விற்பனை செய்பவர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறினார்

HIGHLIGHTS

முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர் அதிரடி
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்  

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் தடுக்கும் வண்ணம் வீடுகளுக்கே காய்கறி மற்றும் பழங்கள் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தினசரி 18 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்களை வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 4,380 வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கு சென்று காய்கறி மற்றும் பழங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழக அரசின் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் சென்னை கோயம்பேட்டில் தொடக்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காய்கறி விற்பனை செய்பவர்கள் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்றும், வியாபாரிகள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Updated On: 24 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்