/* */

சென்னையில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காவல் ஆணையர் தகவல்

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது அதிகரித்திருப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காவல் ஆணையர் தகவல்
X

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விபத்துகளில் 659 பேர் உயிரிழந்துள்ளனர். 3,325 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 26 சதவீதம் (173) பேரும், காயமடைந்தவர்களில் 37 சதவீதம் (1214) பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள். இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 74 சதவீதம் (126) பேரும் காயமடைந்த 86 சதவீதம் (1056) பேரும் தலைக்கவசம் அணியவில்லை.

இதைத்தொடர்ந்து தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் இருசக்கர வாகன ஓட்டிகளில் 72 சதவீதம் பேர் மட்டுமே தலைக்கவசம் அணிகிறார்கள் என்பது தெரியவந்தது. சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக தற்போது அதிகரித்துள்ளது என்றார்.

Updated On: 17 Sep 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  4. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  5. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  6. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  7. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  8. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  9. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?
  10. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......