/* */

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் கனரா வங்கி உணவு வழங்கி வருகிறது.

HIGHLIGHTS

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!
X
சென்னை சிந்தாதிரிபேட்டையில் கனரா வங்கி சார்பில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து உணவின்றி தவித்து வருவோருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றன.

கனரா வங்கி நாடுமுழுவதும் கொரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் உணவின்றி தவிப்போருக்கு மதிய உணவினை வழங்கி வருகிறது.

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை கனரா வங்கி கிளையில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கனரா வங்கி வடக்கு மண்டல அலுவலகம் துணை பொது மேலாளர் பிவி ராவ், துணை மேலாளர் ஆர்.பி. யமுனாலேகா, சிந்தாதிரிப்பேட்டை மேலாளர் அருண் ராஜா முன்னிலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரி யமுனா லேகா கூறுகையில், ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு கனரா வங்கியின் சார்பாக உணவுகளை வழங்கி வருகிறோம்.

விழிப்புணர்வு ஊட்டும் விதமாக அவர்களுக்கு முக கவசம் வழங்கி வருகிறோம்.கொரோனா காலத்தில் தொழிலை மேம்படுத்த சிறு குறு தொழில் செய்பவருக்கு வங்கியில் கடன் உதவி வழங்கி வருகிறோம் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வங்கி கடனை பெற்று தருகிறோம் என்றார்.

Updated On: 10 Jun 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்