/* */

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!
X

தேமுதிக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலுக்கு வந்ததாலும் கூட்டம் சேர கூடாது என்பதாலும் ஆலோசனை கூட்டம் நடத்த முடியவில்லை.

எனவே ஊரடங்கு முடிந்ததும் விரைவில் அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். தேர்தலுக்கு முன்பு யார் யாரிடம் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்தது போல் தேர்தல் முடிந்த பின்னரும் அனைவரிடமும் கருத்து கேட்டு இனிவரும் காலங்களில் கட்சியை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசிக்க உள்ளோம்.

இது போன்ற நேரங்களில் கட்சி நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடையாமல் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவது, கட்சிக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஊரடங்கு முடிந்தவுடன் அல்லது தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றாவது விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முயற்சி செய்து வருகிறோம். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Soon #DMDK #District #Secretaries #Meeting #HeadOffice #Announcement #விரைவில் #தேமுதிக #மாவட்டசெயலாளர்கள் #கூட்டம் #தலைமைகழகம் #அறிவிப்பு #tamilnadu #instanews #chennai

Updated On: 11 Jun 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி