/* */

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு : 13ம் தேதி துவக்கம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 13-ம் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.

HIGHLIGHTS

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு : 13ம் தேதி துவக்கம்
X

பைல் படம்

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 25 தேதி முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் நேரடி கட்டுப்பாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற 3 கல்லூரிகளில் உள்ள 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இவர்களுக்கான தர வரிசை பட்டியல் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். சிறப்பு பிரிவான விளையாட்டு மாணவர்களுக்கு நாளை 12-ம் தேதி ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரி பார்க்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர 435 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 13-ம் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்கள் கவுன்சிலிங் 24-ம் தேதி வரை விண்ணப்பித்த கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்தது.

Updated On: 11 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு