/* */

மாணவர் தற்கொலையில் அதிமுக அரசியல் செய்வது அநாகரீகம்: கனிமொழி

நீட் தேர்வு விவகாரத்தில், மாணவர் தற்கொலை செய்த விவகாரத்தை அதிமுக அரசியலாக்குவது அநாகரீகம் என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

மாணவர் தற்கொலையில் அதிமுக அரசியல் செய்வது அநாகரீகம்: கனிமொழி
X

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், அண்ணா நகரில் உள்ள சத்யா நகரில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், 4பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு மாற்றுதிறனாளிகள் வாகனம், 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

நீட் விவகாரத்தில், அரை மனதோடு கண் துடைப்பிற்காக முயற்சி எடுப்பதற்கும், முழு மனதோடு முயற்சி எடுப்பதற்கு வித்தியாசம் உண்டு. கண் துடைப்பிற்காக செய்தது அதிமுக ஆட்சி. மாணவர் உயிரிழப்பை பயன்படுத்தி, அதிமுக அரசியல் செய்வது அநாகரீகம்.

நீட் தேர்வு தான், நல்ல மருத்துவர்களாக மாற்ற வேண்டும் என்று இல்லை. தமிழகத்தில் படித்து முடித்து பல்வேறு மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் நமது போராட்டம் வெற்றி பெரும். புதிய கல்விக் கொள்கையை ஏற்பதில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று கனிமொழி கூறினார்.

Updated On: 13 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்