/* */

சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும்,பார்ப்பதற்கும் தயார்- புகழேந்தி

சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் தயார் என முன்னாள் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும்,பார்ப்பதற்கும் தயார்- புகழேந்தி
X

புகழேந்தி.

அண்மையில் அதிமுக.,விலிருந்து விலக்கப்பட்ட கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொலைக்காட்சி விவாத நிகழ்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுபேற்றுள்ளார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகிய இருவரும் அதிமுக.,வை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றிக்கொள்ள டெல்லி தெருக்களில் அலைகிறார்கள் என்பது தான் உண்மை; கட்சியை காப்பாற்ற அல்ல.

மிகவும் மோசமான நிலையில் அதிமுக மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும்.

ஒ.பி.எஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தங்கள் அடிமை வாழ்வை தொடர டெல்லி வீதிகளில் சுற்றி வருகிறார்கள். சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறேன். சசிகலா அவர்களால் தான் இந்த காட்சியை காப்பாற்ற முடியும்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆல் கட்சியை காப்பாற்ற முடியாது. இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது.

பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் என்றும் திராவிட இயக்க சிந்தனையில் என்னுடைய செயல்பாடு இருக்கும் விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் என அவர் தெரிவித்தார்.

Updated On: 28 July 2021 3:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  5. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  7. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  8. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  10. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...