/* */

சென்னையில் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைந்தாலும் சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தினசரி செய்யப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்படும். காய்கனி, இறைச்சி விற்பனை மேற்கொள்ளும் மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்து, அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பதையும் கேட்டறிந்து, அதனடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 11 Jun 2021 3:53 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை