/* */

அம்பத்தூர் அருகே தொடக்கப் பள்ளி ஆண்டு விழா: மாணவர்கள் கொண்டாட்டம்

அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாணவர்கள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

அம்பத்தூர் அருகே தொடக்கப் பள்ளி ஆண்டு விழா:  மாணவர்கள் கொண்டாட்டம்
X

மஞ்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் 30ம் வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை அம்பத்தூர் அருகே பாடி மஞ்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் 30 ம் வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக ஆர்வலருமான காஸ்டிங் பாபு கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளியின் பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல லட்சம் மதிப்பீட்டில் தனது சொந்த செலவில் செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஆண்டு விழாவையும் தலைமை ஏற்று நடத்தினார்.

அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ஒருவருக்கு 200 ரூபாய் வீதம், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை அவரது வங்கி கணக்கிலுருந்து பரிமாற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கோடைகால ஆரம்பத்திலிருந்து பள்ளி குழந்தைகளுக்கு தினமும் சத்து நிறைந்த பழங்களை வழங்கி வருகிறார்.

இந்நிகழ்வில் அங்கு பயிலும் குழந்தைகளின் துள்ளலான ஆடல் பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்கு காஸ்டிங் பாபு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார்.

இந்நிகழ்சியின் சிறப்பு அழைப்பாளராக 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் A.P. பூர்ணிமா, பங்கஜம் பாபு மற்றும் அதே பள்ளியில் பயின்றுவரும் சிறுவர் சிறுமியர் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 6:30 AM GMT

Related News