/* */

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி
X

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி  திறந்து வைத்தார்.

சென்னை நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்போது வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்திற்கு அருகாமையில் கூடுதலாக வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் 4656 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு வாகன நிறுத்தும் இடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகன நிறுத்தும் வசதி நாளை (19.03.2023) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். மெட்ரோ இரயில் பயணிகள் இந்த வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி புதுப்பிக்கும் பணிக்களுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது. இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகன வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் விரிவாக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) நேற்று (18.03.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2023 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?