Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
10,12 தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருவது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து உள்ளார். தேசிய அளவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும், தமிழகத்தில் 5 ஆயிரத்தையும் கடந்துவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பின்பற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.