/* */

சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!

சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் ஜுஸ் பிளியும் இயந்திரத்திற்குள் ரூ.10 லட்சம் மதிப்புடைய 200 கிராம் தங்கக்கட்டியை கடத்தி வந்த கடலூா் பயணி சென்னை விமானநிலையத்தில் கைது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!
X

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது கடலூரை சோ்ந்த அருள்ராஜ் சுப்ரமணியம்(41) என்பவா் அந்த விமானத்தில் வந்தாா்.அவா் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அவருடைய சூட்கேசுக்குக்குள் ஜுஸ் பிளியும் இயந்திரம் ஒன்று இருந்தது.அதை எடுத்து திறந்து பாா்த்தனா்.அதற்குள் 200 கிராம் தங்கக்கட்டியை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.10 லட்சம்.இதையடுத்து பயணி அருள்ராஜை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 16 Jun 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!