/* */

தா.பாண்டியன் உடல் நாளை அடக்கம்: முத்தரசன்

தா.பாண்டியன் உடல் நாளை அடக்கம்: முத்தரசன்
X

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகர் கட்சி அலுவலகத்தில் இன்று இரவு வரை வைக்கப்படும். நாளை மதியம் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் நடைபெறும் என முத்தரசன் அறிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளரும், தேசியக் குழு உறுப்பினருமான தா.பாண்டியன் மறைவையொட்டி, வருகிற மார்ச் 4 ம் தேதி வரை ஒருவார காலம் துக்கம் கடைப்பிடிக்கப்படும். மேலும் கட்சியின் அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு கட்சி அமைப்புகளையும், உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறது.

அவரது உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலிக்காக இன்று மதியம் 2 மணிவரை டி.வி.எஸ் நகர், 48-வது தெரு, அண்ணா நகர், (மேற்கு விரிவாக்கம்), சென்னை - 600 101 உள்ள இல்லத்திலும்,இன்று (பிப்.26) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாலன் இல்லம், செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தி.நகரிலும் வைக்கப்படும்.அவரது உடல் நல்லடக்கம் நாளை (பிப்.27) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழ் வெள்ளை மலைப்பட்டியில் உள்ள டேவிட் பண்ணை தோட்டத்தில் 2 மணிக்கு நடக்கிறது.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Feb 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!