/* */

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு: அமைச்சர் திறப்பு!

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைவசதிகளுடன் கொரோனா வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு: அமைச்சர் திறப்பு!
X

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பாக சுமார் 500 விவசாயிகளின் நிலங்களில் உள்ள மணல்களை எடுத்து மகசூல் பெறுவதற்கான சோதனை செய்து காட்டினர் .

எந்தவித பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்தாமல் இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் தானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பார்வையிட்டு மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரியை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், செங்கல்பட்டு திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  2. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  5. சினிமா
    ஹாலிவுட் ரீமேக்கில் கமல், ரஜினி..! இயக்குநர் லோகேஷ் கனகராஜாம்..!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  8. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  9. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!