/* */

திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும் தற்கொலை!

திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும் தற்கொலை!
X
உயிரிழந்த 2 வயது குழந்தை, தாய்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவரது மனைவி வைதேகி (23) . இவர்களுக்கு யாஷிகா என்கிற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று வைதேகி தன் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திடீரென வைதேகி வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மணிகண்டன், குழந்தையையும், வைதேகியையும் மீட்டு கேளம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வைதேகியை சென்னை அரசு மருந்துவமனையிலும், குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 7 Jun 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  3. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  4. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  5. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  6. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  7. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  8. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  9. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  10. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...