/* */

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த திமுக வேட்பாளர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் கலையரசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். நகர்ப்புற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர். அதனடிப்படையில் காஞ்சி வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினர். அதில் திமுக பேரூர் செயலர் யுவராஜ், முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி உட்பட 7 ஆண்கள், 7 பெண்கள் என 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மாவட்ட ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 3 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்