/* */

பாலியல் புகார்: கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிர்வாகி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, செங்கல்பட்ட மாவட்டம் கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

பாலியல் புகார்: கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிர்வாகி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!
X

பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இப்பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நடத்தி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளின் மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ள செங்கல்பட்டு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குழந்தைகள் உரிமைகள் ஆணையம், இந்த புகார் குறித்து விசாரணை செய்துள்ளது. இந்த விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. போக்சோ சட்டம் பாய்ந்துள்ள நிலையில், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சுவலி காரமணாக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Updated On: 13 Jun 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  2. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  3. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  4. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  5. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  6. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  7. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...