/* */

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையில் பாராட்டு

உலக நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் கார்சல்சனை வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனை பாராட்டு

HIGHLIGHTS

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையில் பாராட்டு
X

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா

இணையம் வழியாக நடைபெறும் (எர்த்திங் மாஸ்டர்ஸ்) எனும் ரேபிட் முறையிலான செஸ் தொடரின் 8-வது சுற்றில் பிரக்ஞானந்தாவும் கார்சல்னும் கடந்த 21-ம் தேதி மோதினார்கள். ரேபிட் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆடப்படும் போட்டியாகும். இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் கார்சலனை இந்திய நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

அதனை கவுரவிக்கும் வகையில், செங்கல்பட்டுமாவட்டம், தாம்பரம்அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்திய நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, பூங்கொத்து கொடுத்து அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய நம்பர் ஒன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில்:நான் கடந்த ஐந்து வயது முதல் எனது செஸ் விளையாட்டை ஆரம்பித்தேன். எனது விளையாட்டு பத்து வயதில் நேஷனல் ப்ளேயரில் தகுதி பெற்றேன் பின்னர் 12 வயது 14 வயது என தொடர்ந்து எனது விளையாட்டை வெற்றி கண்டு உள்ளேன். தற்போது 16 வயதில் வேர்ல்டு நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்று உள்ளேன். எனது விளையாட்டு சாதாரண முறையில் தான் விளையாடினேன் என்றும் கூறினார். தொடர்ந்து தகுதி சேர்ந்தவர்களிடம் விளையாடும் போது தான் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமையும். மீண்டும் இதுபோன்று உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 28 Feb 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!